இன்னும் இருக்கிறார்கள்! கலங்கும் விழிகளின் கண்ணீர் துடைத்திடும் கரங்கள் கொண்டவர்கள், எதைஎதையோ தேடி தொலைந்து போகும் மனித உயிர்களின் மத்தியில் இதயத்தின் உணர்வுகளை கொஞ்சம் நேசிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். "தனக்கான வாழ்க்கை, தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று சுயநலமாய் வாழாமல் இந்த நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று நம் தலைவர்கள் எப்படி போராடினார்கள்" என்று நாமே நினைக்கும் அளவுக்கு சுயநலமாய் போகிறது நம்மை சுற்றி இருக்கும் உலகம்.
குழந்தைகளை ஆதரவற்றவர்களாய் விட்டுச் செல்லும் பெற்றோர்களும், பெற்றோர்களை பார்த்துக்கொள்ள மனமின்றி முதியோர் இல்லத்தில் விட்டுச் செல்லும் உணர்வுகள் இருகிப்போன இல்லாதவர்களும் வாழும் சுயநல உள்ளங்களுக்கு மத்தியில் எங்கு சென்றாலும், எப்படி இருந்தாலும் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட காத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.
"எங்கேயோ ஒரு பேருந்து விபத்துக்கு உள்ளாகிவிட்டதாம்" என நாம் கேட்டறிந்த ஒரு செய்தி நடந்தேறிய பொழுது சிக்கிக் கொண்ட உயிர்களை மீட்க அங்கு என்னவர்கள் சிலர் இருந்திருப்பார்கள். சம்பந்தமே இல்லாத போதும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க இன்னும் சிலர் இருக்கிறார்கள்.ஒருமுறை விபத்துக்குள்ளாகிய பள்ளிப்பேருந்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை காப்பாற்றப் போராடி தன்னுயிர் நீத்த ஆசிரியரும் இருந்திருக்கிறார் இங்கு நம்மோடு.
அப்படி நடக்கும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை முதலுதவி கொடுத்து காப்பாற்ற நினைக்கும் மருத்துவர்களும் விபத்துக்கான காரணம் என்ன என்று அலசி அதை தடுத்து நிறுத்தப் போராடும் என் சில வழக்கறிஞர்களும் இன்னும் இங்கு இருக்கிறார்கள். நம் பகுதியில் நாம் காணும் சில ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்களை கண்டும் காணாமல் போகும் நல்லவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்ட சில தன்னார்வ நிறுவனங்களும் உதவிக்கரங்கள் நீட்டுகிறார்கள்.
"எங்கேயோ ஒரு பேருந்து விபத்துக்கு உள்ளாகிவிட்டதாம்" என நாம் கேட்டறிந்த ஒரு செய்தி நடந்தேறிய பொழுது சிக்கிக் கொண்ட உயிர்களை மீட்க அங்கு என்னவர்கள் சிலர் இருந்திருப்பார்கள். சம்பந்தமே இல்லாத போதும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க இன்னும் சிலர் இருக்கிறார்கள்.ஒருமுறை விபத்துக்குள்ளாகிய பள்ளிப்பேருந்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை காப்பாற்றப் போராடி தன்னுயிர் நீத்த ஆசிரியரும் இருந்திருக்கிறார் இங்கு நம்மோடு.
அப்படி நடக்கும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை முதலுதவி கொடுத்து காப்பாற்ற நினைக்கும் மருத்துவர்களும் விபத்துக்கான காரணம் என்ன என்று அலசி அதை தடுத்து நிறுத்தப் போராடும் என் சில வழக்கறிஞர்களும் இன்னும் இங்கு இருக்கிறார்கள். நம் பகுதியில் நாம் காணும் சில ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்களை கண்டும் காணாமல் போகும் நல்லவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்ட சில தன்னார்வ நிறுவனங்களும் உதவிக்கரங்கள் நீட்டுகிறார்கள்.
உருவமற்று கிடக்கும் உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து நேசிக்க சிலர் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்கள். தொட்டு வந்த கருவறைக்கும் தேடிப்போகும் கல்லரைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட இந்த ஒற்றை வாழ்க்கையில் 'நான் நான்" என்று சுயநலத்தை கட்டிக்கொண்டு இனவேற்றுமை, மொழிவேற்றுமையை கடந்து நிற வேற்றுமையை சிதறிவிட்டு மனிதக்குருதியில் ருசிகண்டு இன்று எதைத் தேடி நாம் இங்கு நம்மவர்களை நேசிக்க மறந்து போகிறோம்.
பத்துயிர் எடுக்க ஒருவன் துனிந்திருந்தால் அதில் ஒற்றை உயிரையாவது காப்பாற்ற என்னவர்களில் ஒருவராவது உதவிக்கரம் நீட்டும் வரை உயிர்வாழும் இந்த பூமியில் ஒரு சிரு இறகாய் நான்!